Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொழில் வரி செலுத்த மாநகராட்சி கெடு

Print PDF

தினமணி 31.08.2010

தொழில் வரி செலுத்த மாநகராட்சி கெடு

சென்னை, ஆக. 30: சென்னை மாநகராட்சியில் தொழில் வரி செலுத்துவோர் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி மாநகராட்சி எல்லைக்குள் பணிபுரியும் மத்திய, மாநில அரசு அலுவலர்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைகள், நிறுவனங்கள், தனியார் விளம்பர நிறுவனங்கள், கம்பெனிகள், தொழில்புரிவோர், விற்பனை வரி செலுத்துவோர் என அனைவரும் 2010-11-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான தொழில் வரி மற்றும் நிலுவைகளை காசோலையாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகவோ (டி.டி.) "வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி' என்ற பெயரில் செலுத்த வேண்டும்.

உரிய காலத்துக்குள் தொழில் வரியினை செலுத்தத்தவறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதத் தொகையுடன் தொழில் வரி வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.