Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் உடனடிவரிவிதிப்பு புதிய சேவை அறிமுகம்: மேயர் ஏ.எல்.எஸ்., துவக்கினார்

Print PDF

தினமலர் 14.09.2010

நெல்லை மாநகராட்சியில் உடனடிவரிவிதிப்பு புதிய சேவை அறிமுகம்: மேயர் ஏ.எல்.எஸ்., துவக்கினார்

திருநெல்வேலி:நெல்லை மாநகரட்சியில் உடனடி வரிவிதிப்பு சேவையை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் துவக்கிவைத்தார்.நெல்லை மாநகராட்சியில் வீடுகள், கட்டடங்களுக்கு மாநகராட்சி வருவாய் அலுவலர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வரிகள் விதிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. இதனால் காலவிரையமும், வரிவிதிப்பில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உடனடி வரிவிதிப்பு சேவை மையம் நெல்லை மாநகராட்சியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் நேற்று துவக்கிவைத்தார். பொதுமக்களான தேவிபாலா, லெனின்துரை, சுஜாதா ஆகியோருக்கு வரிவிதிப்புக்கான உத்தரவுகளை மேயர் வழங்கினார். இதில் துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன், மண்டல தலைவர்கள் விஸ்வநாதன், முகம்மது மைதீன், சுப்பிரமணியன், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவிக்கமிஷனர் சுல்தானா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உடனடி வரிவிதிப்புசேவை பெற வழி என்ன?.மாநகராட்சி நிர்வாகத்தை மேம்படுத்தி ஒளிவு மறைவற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்திடும் வகையில் சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளரே தாம் கட்டியுள்ள கட்டடத்தின் வெளிப்புற அளவு, கட்டத்தின் பயன்பாடு, கூரையின் தன்மை, கட்டுமானம் முடிவுற்ற காலம் மற்றும் கட்டுமானம் அமைந்துள்ள வார்டு எண், இடம் ஆகிய விபரங்களை சமர்பித்து, அதன் அடிப்படையில் சொத்துவரி விதிப்பு செய்து பொதுமக்கள் உடனடியாக பயன்பெறும் வகையில் எளிமையான முறையில் படிவத்தில் பூர்த்தி செய்து தர ஏதுவாக நெல்லை மாநகராட்சி இணைய தளத்தில் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. டாõ://õடசஙைமநமெநடயவசன.கவö.டங என்ற இணைய தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த படிவத்தினை மாநகராட்சி சேவை மையத்திலும் ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விபரங்களை கட்டடத்தின் உரிமையாளர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தினை தாங்களே பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து, அத்துடன் புதியதாக கட்டியுள்ள கட்டுமானத்திற்கு உரிய கட்டட அனுமதி பெற்ற வரைபட ஆவணம் மற்றும் சம்பந்தப்பட்ட பத்திர நகர் (அட்டஸ்டடு காப்பி) ஆகியவற்றை இணைத்து (இரட்டை பிரதிகளில்) மைய அலுவலகத்தில் கவுண்டரில் சமர்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ளலாம். மனுதாரரரால் சமர்பிக்கப்பட்ட தகவல் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் மாநகராட்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அன்றே வரி செலுத்துவதற்கான சிறப்பு அறிவிப்பு தயார் செய்து கட்டத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கை பெறப்படுமாயின் அதன் வரிசை அடிப்படையில் வரிவிதிப்பு கேட்பு வழங்கப்படும்.

மனுதாரர் சமர்பித்த விபரங்கள் குறித்து சரித்தன்மை அறிய சம்பந்தப்பட்ட மண்டல வருவாய் உதவியாளர் மற்றும் உதவி வருவாய் அலுவலர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோர் மனுதாரரின் கட்டுமான இடத்தை தல ஆய்வு செய்து விபரங்களின் சரித்தன்மை உறுதி செய்யப்படும்.மேலும் மனுதாரர் சமர்பித்துள்ள ஆவணங்களின் குறைபாடுகள் மற்றும் தகவல் விபரங்கள் தவறாக இருப்பின் மனுதாரருக்கு வழங்கப்படுகிற சொத்துவரி சிறப்பு அறிவிப்பினை ரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு புதிய வரிவிதிப்பு செய்யப்படும். இதன் மூலம் நெல்லை மாநகர மக்கள் புதிதாக கட்டப்படும் கட்டங்களுக்கு தேவையான மின் இணைப்பு பெறுவதற்கும் மற்றும் குடிநீர் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கவும் தேவையான சொத்துவரி விதிப்பு பெற இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்து கட்டடங்களுக்கான வரிவிதிப்புகளும் இந்த முறையிலேயே இனிவரும் காலங்களில் செயல்படும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.