தினமலர் 27.09.2010
மாநகராட்சி வரி செலுத்த செப்., 30 இறுதி நாள்
கோவை: "மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்டவைகளை வரும் 30ம் தேதிக்குள் கட்ட வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிக்கை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2010 - 2011 முதலாம் அரையாண்டு வரையிலான சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர நிலுவைகளை வரும் 30ம் தேதிக்குள் கட்ட வேண்டும். நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்ய மாநகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் 2010 - 2011 முதலாம் அரையாண்டு வரையிலான சொத்து வரி, குடிநீர் கட்டணம் முதலிய நிலுவைகளை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையினை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.