Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி பாக்கியில் ரூ.4 லட்சம் செலுத்த ஐகோர்ட் உத்தரவு

Print PDF

தினகரன் 28.09.2010

வரி பாக்கியில் ரூ.4 லட்சம் செலுத்த ஐகோர்ட் உத்தரவு

மதுரை, செப். 28: சொத்து வரி பாக்கியில் ரூ.4 லட் சத்தை 4 வாரத்தில் மாநகராட்சியில் செலுத்த தியேட் டர் உரிமையாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வெள்ளக்கண்ணு தியேட்டர் உரிமையாளர் தியாகராஜன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘சொத்து வரி பாக்கி ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்து 92 செலுத்த மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்என கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் ரவிசங்கர் வாதிடுகையில், ‘பாக்கிப்பணத்தில் பகுதியை கட்டுவதாக மனுதாரர் தெரிவித்தார். ஆனால், செலுத்தவில்லைஎன்றார்.

மனுதாரர் வரி பாக்கி வைத்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ரூ.9 லட்சம் பாக்கியிருப்பதாகவும், பகு தியை கட்டுவதாகவும் கூறியுள்ளார். அவர் 4 வாரத் தில் ரூ.4 லட்சம் கட்ட வேண் டும். வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்போது, வரிப்பாக்கி குறைவாக இருந்தால் கட்டிய பணத்தை திரும்ப பெறலாம்என நீதிபதி உத்தரவிட்டார்.