தினமணி 14.10.2010
குடிநீர்க் கட்டணத்தை நாளைக்குள் செலுத்த வேண்டும்: ஆணையர்
திருச்சி, அக். 13: திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணங்களைச் செலுத்த வெள்ளிக்கிழமை (அக். 15) கடைசி நாள் என ஆணையர் த.தி. பால்சாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குடிநீர்க் கட்டண நிலுவை மற்றும் நடப்பு கேட்பு விவரங்கள் ஏற்கெனவே இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலமோ, மாநகராட்சி வரிவசூல் மையங்களிலோ செலுத்த வேண்டிய கட்டணத்தை அறிந்து கொள்ளலாம். கட்டணம் செலுத்த வெள்ளிக்கிழமை கடைசி நாள். தவறும்பட்சததில் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட பொறியர் பிரிவு, வருவாய்ப் பிரிவு அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் சட்டப்படி குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வர் என எச்சரிக்கப்படுகிறது.