Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நடமாடும் வரிவசூல் வாகனத்தில் வரிகளை செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினமலர் 21.10.2010

நடமாடும் வரிவசூல் வாகனத்தில் வரிகளை செலுத்த வேண்டுகோள்

திருநெல்வேலி: நடமாடும் வரிவசூல் வாகனத்தில் வரிகளை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சியின் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் வார்டு வாரியாக அனுப்பப்பட்டு வரிவசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுடைய நடப்பு வரி மற்றும் நிலுவை வரிகளை நெல்லை மாநகராட்சியின் நடமாடும் வரிவசூல் வாகனத்தில் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.