தினமலர் 22.10.2010
வரி கட்ட மாநகராட்சி வேண்டுகோள்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் வரி கட்ட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரன் அறிக்கை: ஈரோடு மாநகராட்சிக்கு 2010-11ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், உரிம கட்டணங்கள் மற்றும் இதர வரியினங்களை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதுடன், ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் தொகை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.