Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை இணைப்பு பெற கட்டண விவரம் அறிவிப்பு உரிய வைப்புத்தொகை உடனே செலுத்த அறிவுரை

Print PDF

தினகரன்             19.11.2010

பாதாள சாக்கடை இணைப்பு பெற கட்டண விவரம் அறிவிப்பு உரிய வைப்புத்தொகை உடனே செலுத்த அறிவுரை

நாகை, நவ. 19: நாகை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு பெற கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய வைப்புத்தொகையை செலுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ49.43 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட த்தை அமல்படுத்த அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. நாகை நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள வீடுகளில் சாக்கடைகள், கழிவுநீர் குழாய்கள், மல அறைகள் ஆகியவற்றை சுகாதாரத்திற்கு ஏற்ப மற்ற அமைப்புகளை பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் அமைக்கவும், குடியிருப்பு இணைப்புதாரர்களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்ய நகர்மன்ற கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் குடியிருப்புதாரர் கள் ஒவ்வொரு குடியிருப் புக்கும் செலுத்த வேண்டிய டேவணித்தொகை மற்றும் மாதாந்திர கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளை பொறுத்தவரை 500 சதுர அடிக்கு குறைவாக இருந் தால் சேவை கட்டணமாக ரூ100, முன்வைப்புத் தொகையாக ரூ5,000 செலுத்த வேண் டும். 501 முதல் 1200 சதுர அடி வரை இருந்தால் சேவை கட்டணமாக ரூ110முன்வைப்புத்தொகையாக ரூ7500, 1201 முதல் 2400 சதுர அடி வரை இருந்தால் சேவை கட்டணமாக ரூ120,முன்வைப்புத்தொகையாக ரூ9,000, 2400 சதுர அடிக்கு மேல்இருந்தால் சேவை கட்டணமாக ரூ150, முன்வைப்புத்தொகையாக ரூ10,000 செலுத்தவேண்டும்.

வணிக உபயோக கட்டிடங்களை பொறுத்தவரை 500 சதுர அடிக்கு குறைவாக இருந்தால் சேவை கட்டணமாக ரூ.150ம், முன்வைப்புத்தொகையாக ரூ10,000, 501 முதல் 1200 சதுர அடி வரை இருந்தால் சேவை கட்டணமாக ரூ200,

முன்வைப்புத்தொகையாக ரூ15,000, 1201 முதல் 2400 சதுர அடி வரை இருந்தால் சேவை கட்டணமாக ரூ400, முன்வைப்புத்தொகையாக ரூ25,000, 2400 சதுர அடிக்கு மேல் இருந்தால் சேவை கட்டணமாக ரூ10,000, முன்வைப்புத் தொகையாக ரூ1 லட்சம் செலுத்த வேண் டும். எனவே தங்களின் கட்டிட அளவுப்படி வைப்புத்தொகையை நாகை நகராட்சி அலுவலகம் மற்றும் நாகூர் வசூல் மையங்களில் செலுத்தி பாதாள சாக்கடை இணைப்பிற்கு முன்னுரிமை பெற்றுக்கொள்ளவும். பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமையாக முடிய முழு ஒத்துழைப்பு வழங்கவும். இத்தகவலை நாகை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.