Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அடுத்த ஆண்டு முதல் வாகன வரி வசூலிக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினகரன்           25.11.2010

அடுத்த ஆண்டு முதல் வாகன வரி வசூலிக்க மாநகராட்சி திட்டம்

பெங்களூர், நவ.25: பெங்களூர் மாநகராட்சி சார்பில் அடுத்த ஆண்டு முதல் வாகனவரி வசூலிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. பெங்களூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திட்டக் குழு தலைவர் ரவீந்திரா கூறுகையில், மாநகராட்சியில் வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் சுற்றுச்சூழல் பிரச்னை, போக்குவரத்து நெரிசல் ஆகியவை ஏற்படு கின்றன. இதனை தவிர்க்க, வாகனங்களின் எண்ணிக் கையை குறைக்கவும், வாக னங்களுக்கு வரிவசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி அனுமதி பெறப்படும். பெங்களூர் மையங்களில் வாகனவரி வசூலி க்க நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களின் விவ ரங்கள் குறித்து போக்குவ ரத்து துறை அதி காரிகளிடம் கேட்டுபெறப்படும். சொத் துவரியை போன்று வாக னங்களுக்கும் ஆண்டு வரி விதிக்கப்படும் என்றார்.