தினகரன் 26.11.2010
வரி செலுத்தாவிடில் ஜப்தி உடுமலை நகராட்சி எச்சரிக்கை
உடுமலை, நவ.26: உடுமலை நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கை:
உடுமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில்வரி, நகராட்சி கடைவாடகை கட்டணங்கள் ஆகிய வரியினங்களை டிசம்பர் 15ம் தேதிக்குள் உடுமலை நகராட்சி கணினி மையத்தில் செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டுகிறோம்.
பொதுமக்கள் வசதிக்காக அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் வசூல் மையம் செயல்படும். அதற்கு பின்னும் வரியினங்களை செலுத்தாமல் இருந்தால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கடைகள் பூட்டி சீல் வைத்து நகராட்சி பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும், சொத்து வரி செலுத்தாத வீடுகளை பூட்டி சீல் வைத்தல், ஜப்தி செய்தல், வரி செலுத்தாத காலியிடங்களை நகராட்சி வசம் கையகப்படுத்தி சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது