Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சொத்துவரி செலுத்தாதவர் மீது சட்டப்படி நடவடிக்கை

Print PDF

தினகரன்             30.11.2010

சொத்துவரி செலுத்தாதவர் மீது சட்டப்படி நடவடிக்கை

ராசிபுரம், நவ.30: ராசிபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து£ரி செலுத்த தவறியவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட ராசிபுரம் நகரில் உள்ள மக்கள் அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் செலுத்தி அதற்குரிய ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், வரி செலுத்துவோர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் கட்டலாம்.மேலும், அவ்வாறு மேற்குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் செலுத்தாவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கச்செய்வதோடு மட்டுமின்றி சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, ராசிபுரம் நகருக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களும் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது.