தினமலர் 02.12.2010
சொத்து வரி, தொழில் வரி மாநகராட்சி வேண்டுகோள்
சென்னை : குறிப்பிட்ட காலத்தில் சொத்து வரி, தொழில் வரி செலுத்தி, அபராதத்தை தவிர்க்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சொத்து வரி செலுத்துவதற்கான அரையாண்டு காலக்கெடு, அக்டோபர் 15ம் தேதியுடன் முடிவடைந்தது. பொதுமக்கள் உடனே சொத்து வரியை செலுத்தி அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுபோல், தொழில் வரி செலுத்துபவர்களும் காலதாமதம் செய்யாமல், வரியை கட்டுமாறு கேட்டு கொள்ளபட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 206 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.