தினமணி 02.12.2010
சொத்து வரி, தொழில் வரி: உடனே செலுத்த சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
சென்னை, டிச. 1: சொத்து வரி, தொழில் வரி ஆகிய வரிகளை உடனே செலுத்துமாறு சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி செலுத்துவதற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அப்போது வரி செலுத்தத் தவறியவர்கள் இப்போது செலுத்துவதற்காக சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் உடனடியாக வரியைச் செலுத்துவதன் மூலம் கால தாமதத்தையும் அபராதத்தையும் தவிர்க்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.