தினமலர் 06.12.2010
நிலுவையின்றி வரி செலுத்த, நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்
ஓசூர்: "ஓசூரில் வரி கட்டாமல் ஏமாற்றினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ' என நகராட்சி கமிஷனர் இளங்கோவன் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:ஓசூர் நகராட்சிக்குட்பட்ட பகுதி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இதனால், இப்பகுதியில் நகராட்சி மூலம் பல்வேறு நகர அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தில் உள்ளது.அதனால், பொதுமக்கள், வணிகர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரி, வரியில்லா இனங்களை உடனே செலுத்த வேண்டும். அதே போல், நகராட்சி வணிவளாகம், பஸ்ஸ்டாண்ட் கடைகளை ஏலம் எடுத்தவர்களும் மாதந்தோறும் முறையாக நகராட்சிக்கு வாடகை பணத்தை கட்ட வேண்டும்.வாடகை மற்றும் வரிசெலுத்தாமல் நகராட்சியை ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால், பொதுமக்கள், வணிகர்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.