தினகரன் 07.12.2010
தச்சநல்லூர் மண்டலத்தில் வீட்டு குடிநீர் இணைப்பிற்கு மாதம் ரூ.50 செலுத்தினால் போதும் மேயர் தகவல்
நெல்லை, டிச.7: நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்குட்பட்ட வார்டுகளில் வீட்டு குடி நீர் இணைப்பிற்கு மாதம் ரூ.50 கட்டணமாக செலுத்தினால் போதும் என மேயர் சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நெல்லை மாநகராட்சியிலுள்ள 1,2,3,4 மற்றும் 55 வார்டுகளில் வீட்டு குடிநீர் இணைப்பிற்கு மாதம் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்பகுதியிலுள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் விதத்தில் மாநகராட்சி, குடி நீர் வடிகால் வாரியம் மூலம் புதிய குடிநீர் திட்டத்தை உருவாக்கி 2007ம் ஆண்டு முதல் போதுமான அளவு குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. இத்திட்டத்திற்கு உலக வங்கி கடன் பெறப்பட்டது. எனவே வாங் கிய பணத்தை திருப்பி செலுத்த, உலக வங்கி மற்றும் தமிழக அரசு அறிவுறுத்தலின்படி இப்பகுதியிலுள்ள குடிநீர் இணைப்பிற்கு மாதம் ரூ.125 வசூலிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையில் மக்கள் நுகர் வோர் கூட்டமைப்பினர் மதுரை ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்து இந்த வழக் கில் ரூ.125 வசூ லிக்க இடைக்கால தடை யும் வழக் கில் இறுதி தீர்ப்பு பெறப்படும் வரை தற்போதுள்ள படி மாதக்குடிநீர் கட்டணமாக ரூ.50ம் பயனாளிகள் செலுத்த வேண்டுமென்று கடந்த 3&3&2010 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே இறுதி தீர்ப்பு வரும் வரை மாதம் ரூ.50ஐ குடிநீர் கட்டணமாக பொதுமக்கள் செலுத்தினால் போதும். பின்னர் இறுதி தீர்ப்பு முடிவுப்படி குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே இப் பகுதி மக்கள் வீணான வதந்திகளை நம்ப வேண்டாம். போராட்டங்கள் ஏதும் நடத்த தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.