Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டிச.15ம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும்

Print PDF

தினமணி            07.12.2010

டிச.15ம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும்

ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 6: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு 2010-11-ம் ஆண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகைகளை டிசம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் க.முத்துக்கண்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு:

2010-2011-ம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், ஆக்கிரமிப்புக் கட்டணம், குத்தகைக் கட்டணம், தொழில்களின் உரிமைக் கட்டணம், என்.ஆர்.ஒய். மற்றும் எல்.சி.எஸ். கடன் ஆகிய அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களையும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

நகராட்சி கடைகளின் வாடகையை நிலுவையின்றி ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் நகராட்சி கணினி மையத்தில் செலுத்தி உடனே ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் வரி, வரியில்லா இனங்களைச் செலுத்தத் தவறினால் முன்அறிவிப்பு இன்றி, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். 1920-ம் ஆண்டு, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டப்பட்டி மேற்படி சொத்துக்கள், நகராட்சி மூலம் முன்னறிவிப்பு இன்றி ஜப்தி செய்யப்படும் என்று ஆணையர் முத்துக்கண்ணு தெரிவித்துள்ளார்.