Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டிச.15-க்குள் வரி செலுத்த ராஜபாளையம் ஆணையர் உத்தரவு

Print PDF

தினமணி             08.12.2010

டிச.15-க்குள் வரி செலுத்த ராஜபாளையம் ஆணையர் உத்தரவு

ராஜபாளையம், டிச. 7: ராஜபாளையம் நகராட்சிக்குக் செலுத்த வேண்டிய வரிகளை டிச.15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளர் காளிமுத்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிவித்திருப்பதாவது:

ராஜபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை தொகை, உரிமைக் கட்டணங்கள் அனைத்தையும் உடனே நகராட்சி அலுவலகத்தில் உள்ள வசூல் மையத்தில் கட்டி ரசீது பெற வேண்டும். டிச.15-ம் தேதிக்குள் கட்டத் தவறினால் வரி பாக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்