Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சொத்துவரி வசூல் ரசீது: தபாலில் அனுப்ப திட்டம்

Print PDF

தினமலர்         20.01.2011

சொத்துவரி வசூல் ரசீது: தபாலில் அனுப்ப திட்டம்

சென்னை : "சென்னை மாநகராட்சியில், கையடக்க கருவி மூலம் வசூலிக்கப்படும் சொத்து வரி விவரங்கள் அடங்கிய ரசீது, தபால் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்று, கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.சென்னை மாநகராட்சியில், 155 வார்டுகளிலும் வரி வசூலிப்போர் வீடு வீடாகச் சென்று சொத்துவரி வசூல் செய்கின்றனர். இதன்மூலம், அதிக அளவு சொத்து வசூல் செய்யப்படுகிறது.

வரி வசூலிப்போரின் கையடக்க கருவியில், வரி வசூல் செய்வதற்கு ஆதாரமான, ரசீது தருவர்.மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில், நடத்துனர்கள் கொடுக்கும் பஸ் டிக்கெட் போல், சொத்துவரி கட்டியதற்கான ரசீது இருக்கும். கையடக்க கருவி மூலம் வழங்கப்படும் ரசீதுகளில் உள்ள எழுத்துக்கள் இரண்டு, மூன்று நாட்களில் அழிந்து விடுவதால், சொத்து வரி கட்டியதற்கான ஆதாரமாக அந்த ரசீதை வைத்திருக்க முடியவில்லை.அதோடு சொத்து வரி கட்டியிருந்தாலும், மாநகராட்சியில் சரிவர கணக்கில் வைக்காமல், சொத்துவரி நிலுவை உள்ளதாக நோட்டீஸ் அனுப்புகின்றனர். இதனால், சொத்து உரிமையாளர்கள் ஏராளமானோர் தினமும், மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து சரி பார்த்துச் செல்கின்றனர்.இது குறித்து, கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:கையடக்க கருவிகள் மூலம் வழங்கப்படும் சொத்து வரி ரசீது அழிந்து விடுவதால், சொத்து வரி செலுத்திய உரிமையாளர்களுக்கு அன்றைய தினமே மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், கம்ப்யூட்டரில் பதிவு செய்து பணம் கட்டியதற்கான ரசீதை தபாலில் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர்கள் ஆன்-லைன் மூலம் தெரிந்து கொள்ள வசதியாக இணையதளத்திலும் வெளியிடப்படும். இரண்டு வார காலத்தில் அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.நகரில், 150க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய உணவகங்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். உணவகங்கள் செயல்படும் கட்டட உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தாமல் இருப்பதால், உணவகங்களின் உரிமையாளர்கள் உரிமம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து, அதிகாரிகள் விசாரித்து தக்க நடவடிக்கை மேற்கொள்வர். இவ்வாறு கமிஷனர் கூறினார்.