Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சமத்தூர் பேரூராட்சியில் வரிவசூல் தீவிரம்

Print PDF

தினமலர்        30.03.2011

சமத்தூர் பேரூராட்சியில் வரிவசூல் தீவிரம்


பொள்ளாச்சி : சமத்தூர் பேரூராட்சியில் குடிநீர், சொத்து வரி கட்டணம் வசூலிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமத்தூர் மற்றும் பொன்னாச்சியூர் பகுதிகளில், மொத்தம் 1,528 வீடுகள் உள்ளன. இந்த மாத இறுதிக்குள் குடிநீர் வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூலிக்கப்பட வேண்டும். இந்நிலையில் அதிகாரிகள், வரிகள் அனைத்தும் வசூலிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுப்பட்டுள்ளனர்.

சமத்தூர் பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: "மொத்தம் சொத்து வரியாக எட்டு லட்சம் வசூலிக்க வேண்டும். அதில், 96 சதவிகிதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. குடிநீரின் வரி மூன்றரை லட்சத்தில், 93 சதவிகிதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வரிகள் வரும் 31 தேதிக்குள் முழுமையாக வசூலிக்கப்படும். அனைத்து கட்டணமும் வசூலிக்கப்படுவதால், இந்த ஆண்டு செலுத்தாத நிலுவை தொகை இருக்காது' என்றனர்.