Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"குடிநீர் கட்டணத்தை உடனடியாக செலுத்தி துண்டிப்பை தவிர்க்கவும்'

Print PDF

தினமணி               27.07.2012

 "குடிநீர் கட்டணத்தை உடனடியாக செலுத்தி துண்டிப்பை தவிர்க்கவும்'

 கோவில்பட்டி, ஜூலை 26:  கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணத்தை உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்  தவிர்க்குமாறு நகராட்சி ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நகராட்சி ஆணையர் வரதராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி நகராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் நடப்பு வரை கட்டணம் செலுத்தாத நபர்கள், உடனடியாக கட்டணத்தை நிலுவையின்றி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாமல் நிலுவையில் உள்ள இணைப்புகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி துண்டிக்கப்படும். எனவே, குடிநீர் கட்டணம் நிலுவையை உடனடியாக செலுத்தி குழாய் இணைப்பு துண்டிப்பை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.