தினகரன் 22.08.2012
ஆக.25க்குள் சொத்து வரி செலுத்த மாநகராட்சி கெடு
நெல்லை, : நெல்லை மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மோகன் கூறியருப்பதாவது:
நெல்லை மாநகராட்சிக்கு 2012-13 முத லாம் அரையாண்டிற் கான சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை சேவை கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதற்கான கடைசி நாள் ஏப்.15 ஆகும்.
நடப்பு ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான வரியை செலுத்தாமல் நிலுவை வைத் துள்ள வரி விதிப்பாளர்களின் சொத்துகள் மீது ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆகிய சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே நிலுவை மற்றும் நடப்பு அரையாண்டுக் கான சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்ட ணம், தொழில் வரி, கடை வாடகை, பாதாள சாக் கடை சேவை கடடணம் ஆகியவற்றை வரும் 25ம் தேதிக்குள் மாநகராட்சி கம்ப்யூட்டர் வரி வசூல் மையங்கள் மற்றும் வரி வசூலர்கள் மூலம் செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரியினங்களை செலுத்தி சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு கமிஷனர் தெரிவித்துள்ளார்.