தினமலர் 03.09.2012
வரி செலுத்த அறிவிப்பு
திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி வரி பாக்கியினை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நகராட்சி ஆணையர் அண்ணாதுரை செய்தி குறிப்பு: திண்டிவனம் நகர எல்லைகுட்பட்ட பகுதிகளில் வசிப்போர், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, மற்றும் அனைத்து இனங்களில் உள்ள நிலுவை தொகைகளை வரும் 10ம் தேதிக்குள், நகராட்சியில் செலுத்த வேண்டும்.செலுத்த தவறினால், நகராட்சி சார்பில் ஜப்தி நடிவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.