Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி தொழில்வரியை மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும்

Print PDF
தின மணி          23.02.2013

மாநகராட்சி தொழில்வரியை மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும்


தொழில்வரியை மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும், தொழில் உரிமங்களை மார்ச் 31-க்குள் புதுப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு: மத்திய, மாநில அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள், மத்திய மாநில அரசு நிறுவனங்கள், தனியார் விளம்பர நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டவர்கள் 2012-13 இரண்டாம் அரையாண்டுக்கான தொழில் வரியை மாநகராட்சிக்கு செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதற்கு முந்தைய அரையாண்டுகளுக்கான தொழில்வரி நிலுவையில் இருப்பின் அதற்கான தொகையையும் சேர்த்து மார்ச் 31-ம் தேதிக்குள் வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலையாகவோ, கேட்பு வரைவோலையாகவோ செலுத்த வேண்டும்.

உரிமம் புதுப்பித்தல்: 2013-14 நிதியாண்டுக்கான தொழில் உரிமங்களை மார்ச் 31-க்குள் புதுப்பிக்க வேண்டும். மண்டல அலுவலகங்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணி வரை உரிமங்களைப் புதுப்பிக்கலாம்.

மார்ச் 31-க்குள் உரிமம் புதுப்பிக்கத் தவறும் பட்சத்தில் நிர்ணயிக்கப்பட்ட உரிமத் தொகையில் 50 சதவீதம் அபராதமாக செலுத்தி ஏப்ரல் 30-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

உரிமக் கட்டணத்துடன், துப்புரவு கட்டணத்தை சேர்த்து ஒரே வரைவு காசோலையாக வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் செலுத்த வேண்டும்.
Last Updated on Monday, 25 February 2013 11:13