Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"நகராட்சி வரிகளை செலுத்தாவிடில் நடவடிக்கை'

Print PDF
தினமணி         11.03.2013

"நகராட்சி வரிகளை செலுத்தாவிடில் நடவடிக்கை'


கோவில்பட்டி நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரியையும் உடனடியாக செலுத்துமாறு, நகராட்சி ஆணையர் வரதராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோவில்பட்டி நகராட்சி எல்கைக்கு உள்பட்ட வார்டுகளில் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில், வீட்டு முன் தண்டோரா போட்டு வசூலிக்கப்படும். குடிநீர்க் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

எனவே, இந் நடவடிக்கைகளைத் தவிர்க்க பொதுமக்கள் வரிகளை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றார் அவர்.