தினகரன் 25.03.2013
மதுக்கரை பேரூராட்சியில் 100 சதவீத வரி வசூல்
கோவை: மதுக்கரை பேரூராட்சியில் வரி வசூல் பணி தீவிரமாக நடத்தப்பட்டது. நடப்பாண்டில் குடிநீர் வரியாக 21.82 லட்ச ரூபாயும், சொத்து வரியாக 22.50 லட்ச ரூபாயும், தொழில் வரியாக 6.86 லட்ச ரூபாயும் வசூலிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக மதுக்கரை பேரூராட்சியில் வரி வசூல் மந்தமாக நடந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக பேரூராட்சி நிர்வாகம் 100 சதவீத வரி வசூல் இலக்கை எட்டியுள்ளது. விடுமுறை தினங்களில் வரி வசூல் நடத்தப்பட்டது. பேரூராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வரியினங்களை வசூல் செய்துள்ளனர். 100 சதவீத வரி வசூல் காரணமாக பேரூராட்சி பணிகள் திட்ட பணிகள் வேகமாக நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ்ராம் தெரிவித்தார்.
மதுக்கரை பேரூராட்சியில் 100 சதவீத வரி வசூல்
கோவை: மதுக்கரை பேரூராட்சியில் வரி வசூல் பணி தீவிரமாக நடத்தப்பட்டது. நடப்பாண்டில் குடிநீர் வரியாக 21.82 லட்ச ரூபாயும், சொத்து வரியாக 22.50 லட்ச ரூபாயும், தொழில் வரியாக 6.86 லட்ச ரூபாயும் வசூலிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக மதுக்கரை பேரூராட்சியில் வரி வசூல் மந்தமாக நடந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக பேரூராட்சி நிர்வாகம் 100 சதவீத வரி வசூல் இலக்கை எட்டியுள்ளது. விடுமுறை தினங்களில் வரி வசூல் நடத்தப்பட்டது. பேரூராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வரியினங்களை வசூல் செய்துள்ளனர். 100 சதவீத வரி வசூல் காரணமாக பேரூராட்சி பணிகள் திட்ட பணிகள் வேகமாக நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ்ராம் தெரிவித்தார்.