Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் வாரிய வரி வசூல் மையங்கள் 30, 31-ஆம் தேதிகளில் திறந்திருக்கும்

Print PDF
தினமணி         29.03.2013

குடிநீர் வாரிய வரி வசூல் மையங்கள் 30, 31-ஆம் தேதிகளில் திறந்திருக்கும்


சென்னை குடிநீர் வாரிய வரி வசூல் மையங்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 30, 31) திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் பி. சந்திர மோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய இந்த அரையாண்டுக்கான கட்டணங்கள், வரிகள் ஆகியவற்றை மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தாமதமாக வரி செலுத்தினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

வரிகள் மற்றும் கட்டணங்களை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம், பகுதி அலுவலகங்கள் மற்றும் வசூல் மையங்களில் செலுத்தலாம். வரி வசூல் மையங்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் (மார்ச் 30, 31) திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.