தினமணி 30.03.2013
சத்தியமங்கலம் நகராட்சி 100 % வரிவசூல் சாதனை
சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவிகிதம் வரிவசூல் செய்த நகராட்சிப் பணியாளர்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சத்தியமங்கலம் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி போன்ற வரி இனங்களை மக்களிடமிருந்து முழுமையாக வசூல் செய்ய வேண்டும் என்று நகராட்சிப் பணியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, நகராட்சி மேலாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமையிலான குழுவினர் முனைப்புடன் செயல்பட்டு, மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்னதாகவே, நிலுவையின்றி 100 சதவிகிதம் வரிவசூல் செய்து நகராட்சிக்கு வருவாய் ஈட்டியுள்ளனர்.
சொத்துவரி ரூ. 130.68 லட்சம், தொழில்வரி ரூ. 26.73 லட்சம், குடிநீர்க் கட்டணம் ரூ. 54.59 லட்சம் மற்றும் வரியில்லாத இனங்கள் ரூ. 102.15 லட்சம் என மொத்தமாக ரூ. 3.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், ரூ. 14.60 லட்சம் அனைத்துப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முழுமையான வரிவசூல் செய்த பணியாளர்களுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி முன்னிலையில், நகராட்சித் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் பணியாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.
சத்தியமங்கலம் நகராட்சி 100 % வரிவசூல் சாதனை
சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவிகிதம் வரிவசூல் செய்த நகராட்சிப் பணியாளர்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சத்தியமங்கலம் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி போன்ற வரி இனங்களை மக்களிடமிருந்து முழுமையாக வசூல் செய்ய வேண்டும் என்று நகராட்சிப் பணியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, நகராட்சி மேலாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமையிலான குழுவினர் முனைப்புடன் செயல்பட்டு, மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்னதாகவே, நிலுவையின்றி 100 சதவிகிதம் வரிவசூல் செய்து நகராட்சிக்கு வருவாய் ஈட்டியுள்ளனர்.
சொத்துவரி ரூ. 130.68 லட்சம், தொழில்வரி ரூ. 26.73 லட்சம், குடிநீர்க் கட்டணம் ரூ. 54.59 லட்சம் மற்றும் வரியில்லாத இனங்கள் ரூ. 102.15 லட்சம் என மொத்தமாக ரூ. 3.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், ரூ. 14.60 லட்சம் அனைத்துப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முழுமையான வரிவசூல் செய்த பணியாளர்களுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி முன்னிலையில், நகராட்சித் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் பணியாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.