Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெருவில் குப்பை கொட்டிய கடைக்காரர்களுக்கு மாநகராட்சி அபராதம்

Print PDF

னமணி 16.09.2009

தெருவில் குப்பை கொட்டிய கடைக்காரர்களுக்கு மாநகராட்சி அபராதம்

கோவை, செப்.15: தெருவில் குப்பை கொட்டிய கடைக்காரர்களுக்கு கோவை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது.

பெரும்பாலும் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்த பிறகு கடைகள், நிறுவனங்களில் இருந்து குப்பைகளை தெருக்களில் கொட்டிவிடுகின்றனர்.

கழிவுப் பொருள்களை குப்பைத் தொட்டியில் கொட்டாமல், தெருக்களில் வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் சுமதி தலைமையில் சுகாதாரத் துறையினர் பெரிய கடைவீதி, ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

அப்போது தெருக்களில் குப்பை கொட்டிய 23 கடைகளுக்குத் தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.

Last Updated on Wednesday, 16 September 2009 10:54