Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர், கழிவுநீர் கட்டணம் செப்டம்பர் 30-க்குள் செலுத்த வேண்டும்

Print PDF
தினமணி 23.09.2009

குடிநீர், கழிவுநீர் கட்டணம் செப்டம்பர் 30-க்குள் செலுத்த வேண்டும்

சென்னை, செப். 22: நடப்பு 2009-2010-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை குடிநீர் வாரியத்தின் வசூல் மையங்கள் சனிக்கிழமை உள்பட வாரத்தின் அனைத்து வேலை நாள்களிலும் செயல்படும். செப்டம்பர் 30-ம் தேதிக்கு பிறகு செலுத்தினால் மேல்வரி விதிக்கப்படும். மேலும் இது குறித்து விவரங்களுக்கு அவரவர்களுக்குரிய சென்னைக் குடிநீர் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 23 September 2009 06:40