தினமணி 24.09.2009
நெல்லித்தோப்பு பகுதியினருக்கு தண்ணீர் வரி செலுத்த புதிய ஏற்பாடு
புதுச்சேரி, செப். 23: புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதி மக்களுக்கு தண்ணீர் வரி செலுத்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இத் தொகுதியின் எம்எல்ஏ ஓம்சக்திசேகர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
நெல்லித்தோப்பு தொகுதிக்கு உள்பட்ட மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் வரி செலுத்த கோரிமேட்டிலும், உப்பளத்திலும் உள்ள தண்ணீர் வரி செலுத்தும் அலுவலகத்தில் வரி செலுத்த சிரமப்பட்டனர்.
இது தொடர்பாக தொடர்ந்து அரசை வலியுறுத்தியதால் தற்போது என் தொகுதிக்கு உள்பட்ட டி.ஆர். நகர் 5-வது வீதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைந்துள்ள இடத்திலேயே இனி தண்ணீர் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி 24-ம் தேதி முதல் மக்களுக்குக் கிடைக்கும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.