Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலுவை வரிகளை செலுத்திட மன்னார்குடி நகராட்சி அழைப்பு

Print PDF

தினமணி 4.11.2009

நிலுவை வரிகளை செலுத்திட மன்னார்குடி நகராட்சி அழைப்பு

மன்னார்குடி, நவ. 3: மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொழில், சொத்து, தண்ணீர் வரிகள், கடை வாடகை ஆகியவற்றிற்கான நிலுவை வரி வசூல் சிறப்பு முகாம்கள் 3 நாள்கள் நடைபெறும் என ஆணையர் செ. மதிவாணன் தெரிவித்துள்ளார்.

நவ. 5,6,7 ஆகிய தேதிகளில் நகராட்சி ராஜாம்பாளையம் நடுநிலைப் பள்ளி, கோபால சமுத்திரம் மேலவீதி நகராட்சி கூட்டுறவு ஹர்பன் பேங்க் பள்ளி, உப்புக்காரத் தெரு தூய வளனார் நடுநிலைப் பள்ளி, நகராட்சி மகப்பேறு மையம், நகராட்சி அலுவலகம் ஆகிய ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வரி வசூல் முகாமில் தங்களின் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்திட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 04 November 2009 06:17