தினமணி 24.12.2009
நாமக்கல் நகராட்சியில் குடிநீர், சொத்துவரி செலுத்த சிறப்பு முகாம்
நாமக்கல், டிச.23 : நாமக்கல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை வசூலிக்க சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்து வரி, குடிநீர் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கும் வகையில் வியாழக்கிழமை (டிச. 24) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் நிலுவையின்றி செலுத்தி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள நகராட்சி ஆணையர் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.