தினமலர் 20.01.2010
ரூ.1 'பார்க்கிங்' கட்டணம் 40 சாலைகளில் வசூலிப்பு : மாநகராட்சி முடிவுமதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்டுகள், சில வீதிகளில் மட்டும் "பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான சாலைகளில் கட்டணம் இல்லை. இதனால் இந்த வாகனங்களுக்கு பாதுகாப்பும் கிடையாது. இந்நிலையில் நிதியை பெருக்கும் நடவடிக்கையாக சில சாலைகளில் "பார்க்கிங்' கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து 40 சாலைகளை மாநகராட்சி கண்டறிந் துள்ளது. இச்சாலைகளில் ஒரு ரூபாய் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கட்டணத்தை வசூலிக்கும் உரிமத்தை ஏலம் விடுவதன் மூலம், மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும், என மாநகராட்சி எதிர்பார்க்கிறது.