தினமலர் 22.01.2010
மாநகராட்சி வரி பாக்கி ரூ.40 லட்சம் செலுத்த முடிவு
மதுரை : மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில், வாடகையில் இயங்கும் மீன் மார்க்கெட், இரும்பு, மரம் மற்றும் பஜார் கடைகள், நகைப்பட்டறை வரி பாக்கியை செலுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாநகராட்சி உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
எழுத்தாணிக்காரத் தெரு, ஆர்.எம்.எஸ்.,ரோடு பாண்டி பஜார், திலகர் திடல், லாரி ஸ்டாண்ட் கடைகள், சுப்பிரமணியபுரம், ராம்நகர் மார்க்கெட்டுகள் உள்பட 930 கடைகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநகராட்சிக்கு 40 லட்சம் ரூபாய் வரி பாக்கியை, ஜன.,31 க்குள் செலுத்த உறுதியளித்தனர். சந்தை கண்காணிப்பாளர் ரங்கராஜன், வரித்தண்டலர்கள் ஆறுமுகம், மாணிக்கம், எடி பங்கேற்றனர்.