தினமலர் 04.02.2010
குடிநீர் குழாய் இணைப்பு கட்டணம் ஆயிரம் உயர்வு
வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி நகராட்சி கூட்டத்தில், புதிய குடிநீர் குழாய் இணைப்பு கட்டணம் 1,000 ரூபாய் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேலூர் சத்துவாச்சாரி நகராட்சி கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ஜெய லட்சுமி ஏழுமலை தலைமை வகித்தார். செயல் அலுவலர் சண்முகம், கவுன்சிலர்கள் சக்கரவர்த்தி, சண்முக சுந்தரம், சேகர், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதில் உள்ள நடைமுறைகளை எளிதாக்க வேண்டும், நகராட்சி குடிநீர் கட்டணத்தை சாலைகளின் தரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்ய வேண்டும், புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கு 1,000 ரூபாய் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர