தினகரன் 04.02.2010
வரி வசூல் முகாம்
குன்னூர்: குன்னூர் நகராட்சி ஆணையர் ராஜன், வெளியிட்டுள்ள அறிக்கை:
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 31ம் தேதி வரை தீவிர வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. சனிக்கிழமை உள்ளிட்ட அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரியை செலுத்தலாம்.
நகராட்சி அலுவலக வசூல் மையம் மற்றும் சந்தை கண்காணிப்பாளர் வசூல் மையத்தில் வரி வசூலிக்கப்படும். பொது மக்கள் சொத்து, தொழில், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி பொது மக்கள், வியாபாரிகள் செலுத்தி ஒத்துழைக்க வேண்டும்