78 லட்சம் வரி வசூல்
மதுரை:மாநகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது வரி வசூலில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.வருவாய் உதவி கமிஷனர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் நேற்று இன்ஜினியர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், நான்கு மண்டலங்களிலும் வரி வசூலில் ஈடுபட்டனர். ஒரே நாளில் 78 லட்சம் ரூபாய் வசூலானது. மார்ச் வரை தீவிர வரி வசூல் நடக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.