Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி கட்டாவிடில் குடிநீர் துண்டிப்பு மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினமலர் 12.02.2010

வரி கட்டாவிடில் குடிநீர் துண்டிப்பு மாநகராட்சி அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி கட்ட தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சிக்கு 2009-10ல் செலுத்த வேண்டிய வீட்டுவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், உரிமக் கட்டணங்கள் மற்றும் இதர வரியினங்களை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதுடன், ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் அலுவலகத்தில் பணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Friday, 12 February 2010 07:16