தினமலர் 12.02.2010
வாணியம்பாடியில் வரிவசூல் தீவிரம்
வாணியம்பாடி : வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வரிவசூல் முகாம் நடந்து வருகிறது.வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் ஆகியவைகளை நிலுவையில் உள்ளதையும் நடப்பு ஆண்டின் வரியையும் வசூலிக்க தீவிர வரிவசூல் முகாம் நடந்து வருகிறது. கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் இன்ஜினியர் இளஞ்செழியன், நகரமைப்பு அலுவலர் நமச்சிவாயம், முரளி, குருசீனிவாசன், துப்புரவு ஆய்வாளர்கள் ராஜேந்திரன் சீனிவாசன், ஜான்சன், நடராஜன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் தீவிர வரிவசூல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், வீட்டு வரி ஆகியவற்றை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, ஜப்தி போன்ற நடவடிக்கைளை தவிர்க்குமாறு கமிஷனர் ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.