Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் துண்டிப்பு மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமணி 12.02.2010

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் துண்டிப்பு மாநகராட்சி எச்சரிக்கை

ஈரோடு, பிப்.11: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஆணையர் பி.பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: ÷ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், குத்தகை இனங்கள், உரிமக் கட்டணங்கள் மற்றும் இதர வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும்.

வரி நிலுவைகளை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் நலன் கருதி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வரி செலுத்த மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Last Updated on Friday, 12 February 2010 11:07