தினமலர் 15.02.2010
வரி பாக்கி: வணிக நிறுவனங்களுக்குஅருப்புக்கோட்டை நகராட்சி எச்சரிக்கை
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவபிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சிக்குசெலுத்த வேண்டிய குடிநீர்கட்டணம், சொத்து வரி மற்றும் பிற வரிகளை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் செலுத்த வேண்டும். குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் படுவதுடன் அவர்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்கப்பட மாட்டாது. மேலும், வரி பாக்கி வைத்திருக்கும் தொழில் நிறுவனங்கள் தாங்கள் பாக்கிகளை செலுத்தாத பட்சத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் வரி பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியல் வழங்கப்பட்டு அவர்களின் "லைசென்ஸ்' புதுப் பித்தலை நிறுத்தி வைக்கும் படி பரிந்துரை செய்யப்படும். என்றார்.