Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பத்தூர் பேரூராட்சியில், வரிவசூலில் முகாமில் ஈடுபட்டுள்ள பேரூராட்சிப் பணியாளர்கள்.

Print PDF

தினமணி 15.02.2010

திருப்பத்தூர் பேரூராட்சியில், வரிவசூலில் முகாமில் ஈடுபட்டுள்ள பேரூராட்சிப் பணியாளர்கள்.

திருப்பத்தூர்,பிப்.14: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வரிபாக்கியை வசூல் செய்வதற்காக சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர் பேரூராட்சியில் வீடு, கடை மற்றும் தொழில் வரிக்கு என ரூ,25 லட்சம் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை பாக்கியுள்ளது.

இதனை வசூல் செய்வதற்கென சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம், பேரூராட்சிகளில் பணிபுரியும் வரித்தண்டலர்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து, கடைவீதி, மற்றும் வீடுகள், தொழில் நிறுவனங்களில் தீவிர வரிவசூலில் ஈடுபட்டனர். இரண்டு நாள்களில் மட்டும் ஓன்றரை லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது

Last Updated on Monday, 15 February 2010 10:56