Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலுவை வரித்தொகை செலுத்த குளித்தலை நகராட்சி அறிவிப்பு

Print PDF
தினமலர் 17.02.2010

நிலுவை வரித்தொகை செலுத்த குளித்தலை நகராட்சி அறிவிப்பு

குளித்தலை: "குளித்தலை நகராட்சியில் நிலுவையில் உள்ள வரி பணத்தை பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும்' என நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார். குளித்தலை நகராட்சி கமிஷனர் தனலட்சுமி கூறியதாவது: நகராட்சி பகுதி பொதுமக்கள் செலுத்த வேண்டிய 2009-10ம் ஆண்டுக்கான சொத்து, குடிநீர், தொழில், நகராட்சி கடைகளின் வாடகை ஆகியவை நிலுவையின்றி உடனடியாக செலுத்த வேண்டும். தவறும்பட்சம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் வரி வசூல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நகராட்சி தலைவர் அமுதவேல் கூறுகையில்,""நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் குறிப்பிட்ட காலத்தில் செலுத்தினால், நகராட்சி திட்ட வளர்ச்சி பணிகளை துரிதமாக செயல்படுத்த முடியும். ஆகவே மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:23