தினமணி 17.02.2010
குளித்தலை: நகராட்சி சொத்து வரியை செலுத்த அறிவுறுத்தல்
குளித்தலை, பிப். 16: குளித்தலை நகராட்சி சொத்து வரிகளைச் செலுத்த நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கு. தனலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குளித்தலை நகராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் 2009-10-ம் ஆண்டிற்கு தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி, நகராட்சி கடைகளின் வாடகை, தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி உடனடியாகச் செலுத்த வேண்டும்.
தவறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கைகளான குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.