தினமலர் 18.02.2010
நூறு சதவீதம் வரிவசூலித்து போடி நகராட்சியினர் சாதனை
போடி:போடியில் சொத்து வரியாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்து போடி நகராட்சி நிர்வாகம் நூறு சதவீதமாக சாதனை படைத்துள்ளது.போடியில் வீட்டுவரி, லாட்ஜ், கடை வரி உட்பட பல்வேறு வகையில் கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் வரி உயர்த்தியது. தெருக்களில் வளர்ச்சிப்பணிகள் செய்வதிலும் நிர்வாகத்தினர், சுணக்கம் காட்டியதால் வரி வசூல் செய்வதில் தொய்வு ஏற்பட்டது.
இந்த ஆண்டு வளர்ச்சிப்பணிகள் மட்டுமின்றி நகரில் சுகாதாரத்தை பேணுவதிலும், நகராட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் மார்ச் மாத இறுதியில் 96 சதவீதம் வரிவசூல் செய்திருந்தது. இந்த ஆண்டு மற்ற நகராட்சி நிர்வாகங்களை காட்டிலும், இந் நகராட்சி நிர்வாகம் பிப். ,15 ம் தேதிக்குள் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து வரியாக நூறு சதவீதம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக, நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,"" போடி நகராட்சி பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் 96 சதவீதம் மட்டுமே வரி வசூல் செய்ய முடிந்தது. இந்த ஆண்டு நகரில் வளர்ச்சிப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது, மட்டுமின்றி பணியாளர்களின் ஒத்துழைப்பால் வசூல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வரும் ஆண்டில் நகராட்சி பகுதியில் வளர்ச்சிப்பணிகள் தீவிரப்படுத்தப்படும்'' என்றார