Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிவகாசி நகராட்சியில் சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை

Print PDF

தினமலர் 18.02.2010

சிவகாசி நகராட்சியில் சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை

சிவகாசி:சிவகாசி நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் அறிவிப்பு:சிவகாசி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 2007-2008, 2008 - 2009ம் ஆண்டுகளில் 100 சதவீத சொத்து வரி வசூல் செய்து மாநிலத்திலேயே முதல் வரி வசூல் செய்த நகராட்சி என சாதனை படைத்தது. இதே போன்று நடப்பு ஆண்டில் 100 சதவீதம் சொத்து வரியை வசூல் செய்து முடிவெடுத்து ஊழியர்கள் முடுக்கி விடப்பட்டுள் ளனர்.சொத்து வரி மூலம் சிவகாசி நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.5.41 கோடி வருவாய் கிடைக்கும். நடப்பு ஆண்டில் 2, 16,17 ஆகிய மூன்று வார்டுகள் மட்டுமே 100 சதவீத வரிவசூல் செய்துள்ளது. மீதியுள்ள 30 வார்டுகளிலும் சொத்து வரியினை பிப்.28ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வரி செலுத்த தவறினால் சொத்தின் உரிமையாளர் வீட்டு முன்பு தண்டோரா போட்டும், ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு வரி வசூலிக்கப்படும். எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக வரி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Last Updated on Thursday, 18 February 2010 07:26