தினமலர் 20.02.2010
ஆற்காட்டில் வரிவசூல் தீவிரம்
ஆற்காடு: ஆற்காடு நகரில் நகராட்சி மூலம் டாம்டாம் அடித்து வரி வசூல் செய்கின்றனர்.2009- 10ம் ஆண்டிற்கான நகராட்சி குழாய்வரி, கடை வரி, வீட்டு வரி, தொழில் வரி ஆகிய நிலுவையில் உள்ள வரிபாக்கிகளை ஆற்காடு நகராட்சி ஆணையர் பாரிஜாதம், பொறியாளர் மணி, வருவாய் ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர் மனோகரன், துப்புரவு ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் நகராட்சி சிப்பந்திகள் ஆற்காடு பஜார் பகுதியில் டாம்டாம் அடித்து வரிவசூலில் ஈடுபட்டனர். வரி செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் வைத்தனர். இந்த வரிவசூல் நடவடிக்கை நகரம் முழுவதும் நடைபெறும் என ஆணையர் பாரிஜாதம் தெரிவித்தார்