Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி வரிகளை ஐடிபிஐ வங்கியில் செலுத்தலாம்

Print PDF

தினமணி 20.02.2010

நகராட்சி வரிகளை ஐடிபிஐ வங்கியில் செலுத்தலாம்

கரூர், பிப். 19: கரூர் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரிகளை ஐடிபிஐ வங்கியில் செலுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் நகராட்சியில் வரி வசூல் மையம் இயங்கி வருகிறது. மேலும், நடமாடும் வரி வசூல் சேவை மைய வாகனமும் இயக்கப்படுகிறது. கரூரிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளிலும் வரிகளைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரூர் 80 அடிச் சாலையிலுள்ள தொழில் வளர்ச்சி வங்கி (ஐடிபிஐ) வங்கியில் பணம் செலுத்தும் வசதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தச் சேவையை கரூர் நகராட்சித் தலைவர் பி. சிவகாமசுந்தரி குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தார்.

நகராட்சி ஆணையர் (பொ) சி. ராஜா, கவுன்சிலர் மாரப்பன், நகர் நல அலுவலர் கே. சந்தோஷ்குமார், வங்கி மேலாளர் கே. சக்தி, நகராட்சி மேலாளர் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் ஜெ. மாத்யு ஜோசப், வங்கி ஊழியர்கள் எஸ். ராஜு, அஞ்சலி, எஸ். சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 20 February 2010 10:36