Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்த கால நீட்டிப்பு

Print PDF

தினமலர் 01.03.2010

குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்த கால நீட்டிப்பு

சென்னை :குடிநீர் மற்றும் கழிவு நீர் வரியை செலுத்த, வரும் மார்ச் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய் யப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:இரண்டாம் அரை ஆண்டான 2009- 10ன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியையும், குடிநீர் கட்டணங்களையும் செலுத்த கடைசி நாள் வரும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப் பட்ட தேதிக்கு பின் தாமதமாக செலுத்தினால் மேல் வரி விதிக்கப்படும்.சென்னை குடிநீர் வாரியத்தின் வசூல் மையங்கள் சனிக்கிழமை உட்பட அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். வரும் மார்ச் 21 மற்றும் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும். குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணங்கள் மீது ஏதேனும் விளக்கங்கள் தேவை எனில், அவர்களுக்குரிய சென்னைக் குடிநீர் வாரிய அலுவலகங்களை அணுகலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Last Updated on Monday, 01 March 2010 05:56