தினமலர் 03.03.2010
வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் வரி, சொத்துவரி செலுத்தாதவர்களின் குழாய் இணைப்புகள் துண்டிக்கப் படும் என நிர்வாக அதிகாரி பாபுஜி தெரிவித்துள்ளார். தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்து 500 மேற்பட்ட வீட்டுக்குழாய் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வரியாக மாதம் 50 ரூபாய் செலுத்தவேண் டும். பல மாதங்களாக பலர் வரி செலுத்தாமல் உள்ளனர். இது தவிர சொத்துவரி, தொழில்வரி ஆகிய வகையில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வரி பாக்கி உள்ளது. இதனால் பேரூராட்சி பகுதியில் மராமத்துப்பணிகள் செய்வதிலும், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரி பாபுஜி கூறுகையில், மார்ச் 10 க்குள் வரி செலுத்தாதவர்களின் குழாய் இணைப்புகளை துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.